வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

" alt="" aria-hidden="true" />


வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 
 
வட்டிகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க அவர் கோரியுள்ளார். 21 நாள் ஊரடங்கு உத்தரவு வரவேற்கத் தக்க நடவடிக்கை என்று தெரிவித்துள்ள அவர், நெருக்கடியான நேரத்தில் பாகுபாடுகளை மறந்து நாட்டுக்கும் மனித குலத்துக்கும் கடமை ஆற்ற வேண்டியது முக்கியம் என்றும், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 
பல்வேறு தரப்பினரின் வங்கிக் கணக்குகளில் 7,500 ரூபாய் உதவி நிதி, குடும்ப அட்டைகளுக்கு தலா 10 கிலோ விலையில்லா அரிசி அல்லது கோதுமை, பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கு நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


Popular posts
வேப்பூர் தொடையூர் கிராமத்தில் ரேஷன் பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் வழங்
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image
இந்தியன் 2 பட விபத்து வழக்கு - சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
Image