இந்தியன் 2 பட விபத்து வழக்கு - சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

" alt="" aria-hidden="true" />

 

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். 




 

இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈபிவி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.




 

இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி  இந்தியன்- 2 படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தபோது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனையடுத்து நசரத்பேட்டை போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைது செய்தனர்.

 

மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இச்சம்பவம் குறித்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  படபிடிப்பு விபத்து வழக்கை  நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

 

இந்நிலையில் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்


Popular posts
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
கேரளாவில் இன்று 9 பேருக்கு கொரோனா வைரஸ் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 295 முதல்வர் பினராய் விஜயன் பேட்டி
Image
144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image