மோடி பங்கேற்ற கொல்கத்தா துறைமுக விழா மம்தா புறக்கணிப்பு


மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள கொல்கத்தா துறைமுகம், இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


 

இதுதொடர்பாக கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

 

கொல்கத்தா துறைமுகம் இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

 

கொல்கத்தா துறைமுக வளர்ச்சிக்காக எடுத்து வரும் முன்னேற்ற நடவடிக்கைகளால், அண்டை நாடுகளான பூடான், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான வர்த்தகம் விரைவாகவும், எளிதாகவும் நடைபெறும்.

 

மத்திய அரசின் திட்டங்களான ஆயுஷ்மான் பாரத் யோஜனா மற்றும் பிரதமர் கிசான் சம்மான் உள்ளிட்ட திட்டங்களை மேற்கு வங்காள அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும் என குறிப்பிட்டுள்ளார்.

 

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கொல்கத்தா துறைமுக விழாவை முதல் மந்திரி மம்தா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது


Popular posts
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
கேரளாவில் இன்று 9 பேருக்கு கொரோனா வைரஸ் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 295 முதல்வர் பினராய் விஜயன் பேட்டி
Image
144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image